உள்ளூர் செய்திகள்
கொலை

புஞ்சைபுளியம்பட்டி அருகே கூலித்தொழிலாளி அடித்து படுகொலை

Published On 2021-12-14 11:47 IST   |   Update On 2021-12-14 11:47:00 IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே கூலித்தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலைக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது உறவினர் அரிவால் பின்பகுதியால் அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அண்ணாமலை வீட்டுக்கு சென்று தூங்க சென்று விட்டார்.

இன்று காலை அண்ணாமலை நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போது அண்ணமலை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபால், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவம் வந்து விசாரணை நடத்தினார். அண்ணமலை உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணமலையுடன் தகராறில் ஈடுபட்ட உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் எந்த காரணத்திற்காக தகராறு ஏற்பட்டது. மேலும் அண்ணாமலையை தாக்கியவர்கள் குறித்து விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News