உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

24½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறையினர் தகவல்

Published On 2021-12-13 16:00 IST   |   Update On 2021-12-13 16:00:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 24½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை வேகமாக பரவியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாபெரும் முகாம் நடத்தப்பட்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 14 கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மொத்தம் 24 லட்சத்து 54 ஆயிரத்து 232 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News