உள்ளூர் செய்திகள்
ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கருங்கல்பாளையம் குயில் தோப்பு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.