உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு படையினர் மீட்ட போது எடுத்த படம்.

பல்லடம் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு-தீயணைப்பு படையினர் மீட்டனர்

Published On 2021-12-11 09:27 GMT   |   Update On 2021-12-11 09:27 GMT
கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி.விவசாயத்துடன் கால்நடைகளும் வளர்த்து வருகிறார். 

இந்த நிலையில் இவரது விவசாய தோட்டத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 4 வயது பசுமாடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அதில் தத்தளித்து  கொண்டு இருந்தது.இதையடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். 

கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News