உள்ளூர் செய்திகள்
தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை காணலாம்

தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு

Published On 2021-12-07 04:55 GMT   |   Update On 2021-12-07 04:55 GMT
திம்பம் மலைப்பாதையில் நேற்று இரவு 27-வது கொண்டை ஊசிவளைவு அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் கார், லாரி, பஸ், வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் திம்பம், ஆசனூர், தாளவாடி, தலமலை ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதமாக விட்டு விட்டு தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கொடுத்து ஓடுகிறது. குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் 2 நாட்களாக தாளவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 27-வது கொண்டை ஊசிவளைவு அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதுபற்றி வாகன ஓட்டிகள் ஆசனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திக்கு சென்ற ஆசனூர் போலீசார் மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள் அமைத்தனர். வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகவும் மெதுவாகவும் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.


Tags:    

Similar News