உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தண்டவாள பராமரிப்பு பணி -திருப்பூர் வரும் ரெயில்களின் நேரம் மாற்றம்

Published On 2021-12-04 09:13 GMT   |   Update On 2021-12-04 09:13 GMT
அடுத்தடுத்த நிலையங்களுக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக ரெயில்கள் வந்து சேரும்.
திருப்பூர்:

திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் 2 ரெயில்கள் புறப்படும் நேரம் இன்றும், நாளை 8-ந்தேதியும் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி திருவனந்தபுரம் - செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். 

கோவையை மாலை 4:35-க்கு பதில் இரவு 7:35-க்கும், திருப்பூரை மாலை 5:25-க்கு பதிலாக இரவு 8:25-க்கும் கடக்கும். பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8:10-க்கு பதில் 9:10- க்கு பெங்களூருவில் இருந்து புறப்படும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்து சேரும். இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News