செய்திகள்
மாயம்

வள்ளியூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

Published On 2021-11-27 11:08 GMT   |   Update On 2021-11-27 11:08 GMT
வள்ளியூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரி கிராமத்தை சேர்ந்தவர் சேர்மராஜ் (வயது34). இவர் ஒரு ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி சுகன்யா (29). இவர்களுக்கு ஹன்சிகா (10), அனுஷ்கா (10) என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்மராஜூக்கும், அவரது மனைவி சுகன்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டார். இந்தநிலையில் பெரியவர்கள் சமரசம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆறு மாதமாக கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சேர்மராஜ் வீடு பூட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அவரது மனைவி சுகன்யா, மற்றும் 2 மகள்களையும் காணவில்லை. இதுகுறித்து சுகன்யாவின் பெற்றோர் வீட்டில் விசாரித்தபோது அங்கும் அவர்கள் இல்லை என்று தெரியவந்தது. இதனால் சேர்மராஜ் பல்வேறு இடங்களில் அவர்களை பற்றி விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சுகன்யா மற்றும் இரண்டு குழந்தைகளையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News