செய்திகள்
தற்கொலை

ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை

Published On 2021-11-27 05:56 GMT   |   Update On 2021-11-27 05:56 GMT
ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 36). பெயிண்டர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சத்யமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News