செய்திகள்
திருட்டு

ராஜபாளையத்தில் வீட்டில் இருந்த 2½ பவுன் நகை அபேஸ்

Published On 2021-11-24 11:20 GMT   |   Update On 2021-11-24 11:20 GMT
ராஜபாளையத்தில் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக கூறி வீட்டில் இருந்த 2½ பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்றார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் வசித்து வருபவர் முத்துக்கனி, வியாபாரி.

இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் முத்துக்கனியின் தாயார் சுப்புலட்சுமியிடம் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக கூறினார்.

மகன் தான் அவரை அனுப்பி இருப்பார் என நினைத்த சுப்புலட்சுமி வீட்டுக்குள் உள்ள கழிவறைக்கு செல்ல அனுமதித்தார்.

பணியை முடித்து விட்டு அந்த வாலிபர் சென்ற பிறகு வீட்டில் இருந்த 2½ தங்சச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு சுப்புலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் கழிவறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக வீட்டுக்குள் வந்த நபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News