செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
கடன் பிரச்சினை மற்றும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராசாத்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மனு கொடுப்பதற்காக திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் வந்தார். கையில் மண்எண்ணை கேனுடன் வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, கடன் பிரச்சினை மற்றும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.