செய்திகள்
கடலூா் தென்பெண்ணையாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை காணலாம்

50 ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-11-20 06:01 GMT   |   Update On 2021-11-20 06:01 GMT
கர்நாடக அணையில் உபரிநீர் திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்துகட்டிய மழை மற்றும் சாத்தனூர் அணை தண்ணீர் திறப்பு, கர்நாடக அணையில் உபரிநீர் திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 1.75 லட்சம் கனஅடி நீர் வருகிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1972-ம் ஆண்டு இதேபோல் வெள்ளம் ஏற்பட்டதாக கடலூர் நகர மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News