செய்திகள்
மின் தடை

கள்ளக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2021-11-19 15:25 IST   |   Update On 2021-11-19 15:25:00 IST
கள்ளக்குறிச்சியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராயப்பாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், வடக்கனந்தல், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, காரனுர், புதுமோகூர், பொன்பரப்பட்டு, குடிகாடு, மோ.வன்னஞ்சூர், க.மாமனந்தல், க.அலம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News