செய்திகள்
மின்சார நிறுத்தம்

காக்களூரில் நாளை மின்தடை

Published On 2021-11-19 09:53 GMT   |   Update On 2021-11-19 09:53 GMT
திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், ஜெ.என்.ரோடு, நேதாஜி சாலை, வீ.எம்.நகர், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பூண்டி, மெய்யூர், குஞ்சலம் பென்னலூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News