செய்திகள்
கைது

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி- 2 பேர் கைது

Published On 2021-11-16 10:25 GMT   |   Update On 2021-11-16 10:25 GMT
தஞ்சையில் மூதாட்டியின் வாயை பொத்தி நகையை பறிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை:

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெனால்ட். இவரது மனைவி மரகதம்மேரி (வயது 65). இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

முனிசிபல் காலனியை சேர்ந்த அண்ணன் -தம்பிகளான கிளமன்ட்டேவிட் (25), ஜேம்ஸ் கேம்ரோன் (23) ஆகியோர் மரகதத்திற்கு சுகர் டெஸ்ட் எடுக்க அடிக்கடி சென்றுள்ளனர். இவர்கள் மீது மரகதமேரிக்கு நம்பிக்கை வந்துள்ளது. இதனால் அனைத்து வேலைகளையும் அவர்களிடமே சொல்லி பார்த்துள்ளார்.

சம்பவத்தன்று மரகதம் மேரியை வாயை பொத்தி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க கிளமன்டேவிட், ஜேம்ஸ்கேம்ரோன் ஆகியோர் முயன்ற போது அவர் கத்தியுள்ளார். உடனே இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மரகதம் மேரி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் வழக்குப்பதிவு செய்து கிளமன்ட்டேவிட், ஜேம்ஸ் கேம்ரோன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
Tags:    

Similar News