செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

Published On 2021-11-14 23:57 GMT   |   Update On 2021-11-14 23:57 GMT
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்தார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

Tags:    

Similar News