நெல்லை மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கத்தில் 2 முதியவர்கள் தற்கொலை
நெல்லை:
பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).
இவரது மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அப்போது முதல் ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கு செல்ல போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜார்ஜ் விஷம் குடித்தார்.
அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (70), விவசாயி. இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து இசக்கி முத்து, மனைவி சென்ற இடத்திற்கே செல்லப்போவதாக தன்னை பார்க்க வந்த உறவினர்களிடம் கூறி வந்தார். அப்போது இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.