செய்திகள்
விபத்து

சுசீந்திரம் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2021-11-12 18:16 IST   |   Update On 2021-11-12 18:16:00 IST
சுசீந்திரம் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுசீந்திரம்:

சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறையை சேர்ந்தவர் பொன் டேனியல்ராஜா (வயது 54). இவர் ராமனாதிச்சன்புதூரில் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார். இன்று காலை 5.30 மணியளவில் வழுக்கம்பாறை சந்திப்பு பகுதியில் பொன் டேனியல் ராஜா பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பொன்டேனியல் ராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரின் சகோதரர் பொன் அருள் ஞானஜோஸ் (47), படுகாயமடைந்த பொன் டேனியல் ராஜாவை மீட்டு மயிலாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன் டேனியல் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News