செய்திகள்
விபத்து பலி

போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் டைல்ஸ் தொழிலாளி பலி

Published On 2021-11-12 18:07 IST   |   Update On 2021-11-12 18:07:00 IST
போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் டைல்ஸ் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள சுண்டகாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் அழகிரி (வயது 24). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி அருகே உள்ள திரு வயலூர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான அழகிரியின் உடலை போச்சம்பள்ளி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News