செய்திகள்
குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிகரெட் புகைத்த பயணி கைது
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சிகரெட் புகைத்து ரகளையில் ஈடுபட்ட பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்கு 137 பயணிகளுடன் விமானம் வந்தது.
அதில் பயணம் செய்த ஆந்திரா மாநிலத்தை சோந்த முகமது ஷெரீப்(57) என்பவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து, தனது சீட்டில் அமர்ந்திருந்தபடி புகைபிடிக்கத் தொடங்கினார்.
இதனை சக பயணிகள் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். விமான ஊழியர்களும் எச்சரித்தனர். ஆனால் முகமது ஷெரீப் தொடர்ந்து புகைபிடித்தபடி ஊழியர்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும், தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் புகைப்பிடித்து ரகளை செய்த பயணி முகமது ஷெரீப்பை கைது செய்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்கு 137 பயணிகளுடன் விமானம் வந்தது.
அதில் பயணம் செய்த ஆந்திரா மாநிலத்தை சோந்த முகமது ஷெரீப்(57) என்பவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து, தனது சீட்டில் அமர்ந்திருந்தபடி புகைபிடிக்கத் தொடங்கினார்.
இதனை சக பயணிகள் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். விமான ஊழியர்களும் எச்சரித்தனர். ஆனால் முகமது ஷெரீப் தொடர்ந்து புகைபிடித்தபடி ஊழியர்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும், தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் புகைப்பிடித்து ரகளை செய்த பயணி முகமது ஷெரீப்பை கைது செய்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.