செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை அருகே மின்மோட்டார் அறையில் பிணமாக கிடந்த தொழிலாளி

Published On 2021-11-10 07:51 GMT   |   Update On 2021-11-10 07:51 GMT
இறந்து கிடந்தவர் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் பச்சை கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார்.
உடுமலை:

உடுமலை சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமம் அமராவதி ஆற்று புறம்போக்கு  நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத மின்மோட்டார் அறையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்து கிடந்தவர் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் பச்சை கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

Similar News