செய்திகள்
தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் வேன் டிரைவர் தற்கொலை

Published On 2021-11-08 10:55 GMT   |   Update On 2021-11-08 10:55 GMT
காவேரிப்பட்டணத்தில் வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). வேன் டிரைவர். கடந்த சில நாட்களாக ராஜ்குமார் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவருடைய தாய் சுசீலா கேட்டார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News