செய்திகள்
மின்சார ரெயில்

சென்னையில் மின்சார ரெயில் வழக்கம் போல் இயங்கும்- தெற்கு ரெயில்வே

Published On 2021-11-08 03:34 GMT   |   Update On 2021-11-08 03:34 GMT
செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.

இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தொடர் மழை எதிரொலியால், ரெயில் சேவையும் நேற்று பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரெயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், கனமழையால் தடைப்பட்டு இருந்த மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News