செய்திகள்
விபத்து

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி

Published On 2021-11-06 11:33 GMT   |   Update On 2021-11-06 11:33 GMT
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அழகியபண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பையன். இவரது மகன் எட்வின் (வயது 17). இவர் பூதப்பாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் விஜின் ராஜ்(20). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திட்டுவிளையில் இருந்து பெருந்தலைகாட்டிற்கு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை எட்வின் ஓட்டினார். விஜின்ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் அழகியபாண்டியபுரம் பகுதியில் சென்றபோது எதிரே எட்டாமடைைய சேர்ந்த புஷ்பா தங்கராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். இரண்டு மோட்டார் சைக்கிளும் திடீரென நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் எட்வின், விஜின்ராஜ் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி எட்வின், விஜின்ராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News