செய்திகள்
வாலிபர் பலி

மார்க்கெட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து பலி

Published On 2021-11-06 09:40 GMT   |   Update On 2021-11-06 09:40 GMT
மார்க்கெட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபரின் பெயர் சுந்தர் (வயது 43) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வடக்கு மாசி வீதி மதுக்கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு பார்வையாளர் அறை முன்பு 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News