செய்திகள்
கோப்புப்படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு

Published On 2021-11-05 08:30 GMT   |   Update On 2021-11-05 08:30 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

தீபாவளி பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது32), அஜ்மல் (24), கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த பசுபதி (26), மகாராஜ கடை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (58), ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்த பயாஸ் (32), முகமது முபாரக் (23), ஓசூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (21), சாரதி (19) உள்பட 17 பேர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News