செய்திகள்
கைது

ஓசூரில் காரில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

Published On 2021-11-03 23:42 IST   |   Update On 2021-11-03 23:42:00 IST
ஓசூரில் காரில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 ஆயிரத்து 230 மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த பெங்களூரு ஆடுகோடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News