செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா

Published On 2021-11-02 19:39 IST   |   Update On 2021-11-02 19:39:00 IST
அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 47 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 292 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 876 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News