செய்திகள்
உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

Published On 2021-11-02 11:23 GMT   |   Update On 2021-11-02 11:23 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி செலவாணி முறிவு சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேற்படி நாளில் கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ள தடை உள்ள காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News