செய்திகள்
கொள்ளை

கோவையில் கோவிலின் பூட்டை உடைத்து பணத்துடன் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

Published On 2021-11-02 10:22 GMT   |   Update On 2021-11-02 10:22 GMT
கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்ததுடன் உண்டியலையும் தூக்கி கொள்ளையடித்து சென்றது தெரியவந்து.

கோவை:

கோவை ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று இரவு இவர் பூஜை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் மாயமாகி இருந்தது.

நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்ததுடன் உண்டியலையும் தூக்கி கொள்ளையடித்து சென்றது தெரியவந்து.

இதுகுறித்து அவர் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை போன உண்டியலில் ரூ 20 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News