செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

Published On 2021-10-26 13:21 GMT   |   Update On 2021-10-26 13:21 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதுடன், தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 10 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 569 ஆக உள்ளது. இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்தார். இதனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News