செய்திகள்
பண்ருட்டி பெண் கழுத்தை நெரித்து கொலை?- போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேல்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் இவரது மனைவி மாதவி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.
சிவலிங்கத்தின் தாயார் பார்வதி, சகோதரிகள் வைரம், வாசுகி, மாமா ராஜகோபால் ஆகியோர் மாதவியிடம் அடிக்கடி நகை-பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இது சம்பந்தமாக ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் முத்தாண்டிகுப்பத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவுக்கு சிவலிங்கம் மட்டும் தனியாக வந்துள்ளார். அப்போது சிவலிங்கம் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாதவியின் தந்தை குப்புசாமியும் வந்திருந்தார். அப்போது தனது மகளை அழைத்து வராமல் மருமகன் மட்டும் தனியாக இங்கு வந்து செல்கிறார்? என்று குப்புசாமி குழப்பத்தில் இருந்தார்.
இந்த நேரத்தில் மாதவியின் தந்தை குப்புசாமிக்கு ஒரு போன் வந்தது. அதில் 12 மணி அளவில் உங்களது மகள் மாதவி இறந்து விட்டார் என்ற தகவல் கூறினர். இதை கேட்டு குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மேல்காங்கேயன் குப்பத்துக்கு விரைந்து சென்றார். அங்கு பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் குப்புசாமி புகார் செய்தார். அதில் தனது மகள் மாதவி கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகளை அடித்து கொலை செய்து இருக்கலாம்? என சந்தேகிப்பதாகவும், மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேல்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் இவரது மனைவி மாதவி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.
சிவலிங்கத்தின் தாயார் பார்வதி, சகோதரிகள் வைரம், வாசுகி, மாமா ராஜகோபால் ஆகியோர் மாதவியிடம் அடிக்கடி நகை-பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இது சம்பந்தமாக ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் முத்தாண்டிகுப்பத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவுக்கு சிவலிங்கம் மட்டும் தனியாக வந்துள்ளார். அப்போது சிவலிங்கம் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாதவியின் தந்தை குப்புசாமியும் வந்திருந்தார். அப்போது தனது மகளை அழைத்து வராமல் மருமகன் மட்டும் தனியாக இங்கு வந்து செல்கிறார்? என்று குப்புசாமி குழப்பத்தில் இருந்தார்.
இந்த நேரத்தில் மாதவியின் தந்தை குப்புசாமிக்கு ஒரு போன் வந்தது. அதில் 12 மணி அளவில் உங்களது மகள் மாதவி இறந்து விட்டார் என்ற தகவல் கூறினர். இதை கேட்டு குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மேல்காங்கேயன் குப்பத்துக்கு விரைந்து சென்றார். அங்கு பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் குப்புசாமி புகார் செய்தார். அதில் தனது மகள் மாதவி கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகளை அடித்து கொலை செய்து இருக்கலாம்? என சந்தேகிப்பதாகவும், மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.