செய்திகள்
புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது
புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் நகராட்சி சாலையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் காளிதாஸ் (வயது 42). இவரது கடையில் 10 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த இந்நகர் பஜார் போலீசார் காளிதாசை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.