செய்திகள்
வந்தவாசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
வந்தவாசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு காமராஜர் நகர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 58), விவசாயி. அவர் பல நாட்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.
வயலுக்கு சென்ற ரவி விஷத்தை குடித்து விட்டு மயக்க நிலையில் இருந்தார். தாயார் குமாரி, ரவிக்காக வயலுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார். அப்போது ரவி தனது தாயாரிடம் உடல் நலப் பாதிப்பால் விஷத்தை குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தாயார் குமாரி, ரவியை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள், ரவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.