செய்திகள்
கைது

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-10-06 21:05 GMT   |   Update On 2021-10-06 21:05 GMT
காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி புதூர் பகுதியில் காவேரிப்பட்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிரக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக கோவிந்தராஜ் (வயது 36), ரஜினி (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News