செய்திகள்
கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம்
ஓசூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் பீம்சிங் (வயது 28) இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் அரவிந்த் (33). இவர்கள் இருவரும் பானி பூரி விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அரவிந்த் மனைவி ரூபி, சமையல் செய்வதற்காக, சிலிண்டரை ஆன் செய்தார்.
அப்போது கியாஸ் வீடு முழுவதும் பரவி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் பீம்சிங், அவரது சகோதரர் அரவிந்த், அரவிந்த் மனைவி ரூபி, அரவிந்தின் மகன் அபிஷேக் மற்றும் ரோலி, பீம்சிங்கின் தாய் சந்திராதேவி பீம்சிங்கின் மற்றொரு சகோதரர் ரித்திக் ஆகிய 7 பேர் உடல் கருகி படுகாயமடைந்தனர். மேலும் அருகில் வசிக்கும் ரிஸ்வான் என்பவரது மகன்கள் சபீர் மற்றும் சாதிக் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த பீம்சிங் குடும்பத்தினர் 7 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பீம்சிங், ரிஸ்வான், மாலிகான், ரத்தினம்மா, ஹர்ஷா உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரை உடைந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சீட்டானது, அருகில் உள்ள தெருக்கள் மற்றும் மற்ற வீடுகளின் மேல் விழுந்தது. வீடுகளில் இருந்த உணவு பொருட்கள் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் பீம்சிங் (வயது 28) இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் அரவிந்த் (33). இவர்கள் இருவரும் பானி பூரி விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அரவிந்த் மனைவி ரூபி, சமையல் செய்வதற்காக, சிலிண்டரை ஆன் செய்தார்.
அப்போது கியாஸ் வீடு முழுவதும் பரவி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் பீம்சிங், அவரது சகோதரர் அரவிந்த், அரவிந்த் மனைவி ரூபி, அரவிந்தின் மகன் அபிஷேக் மற்றும் ரோலி, பீம்சிங்கின் தாய் சந்திராதேவி பீம்சிங்கின் மற்றொரு சகோதரர் ரித்திக் ஆகிய 7 பேர் உடல் கருகி படுகாயமடைந்தனர். மேலும் அருகில் வசிக்கும் ரிஸ்வான் என்பவரது மகன்கள் சபீர் மற்றும் சாதிக் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த பீம்சிங் குடும்பத்தினர் 7 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பீம்சிங், ரிஸ்வான், மாலிகான், ரத்தினம்மா, ஹர்ஷா உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரை உடைந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சீட்டானது, அருகில் உள்ள தெருக்கள் மற்றும் மற்ற வீடுகளின் மேல் விழுந்தது. வீடுகளில் இருந்த உணவு பொருட்கள் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.