செய்திகள்
கைது

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு- வங்காளதேச வாலிபர் கைது

Published On 2021-10-01 13:45 IST   |   Update On 2021-10-01 13:45:00 IST
சென்னிமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வங்காளதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் உள்ளது செங்குளம். இங்கு கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று உள்ளார். அப்போது கோவில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலில் இருந்த காணிக்கையும் திருட்டு போய் இருந்ததையும் கண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈங்கூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த முகமத் அப்துல் ஷாகித் காஜி என்பவரின் மகன் முஹமத் கலாம் ஹுசைன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வங்காளதேச நாட்டை சேர்ந்த அடையாள அட்டை, மேற்கு வங்காள மாநிலத்தின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Similar News