செய்திகள்
கைது

மயிலாடுதுறை அருகே மதுவிற்றவர் கைது

Published On 2021-09-28 13:18 GMT   |   Update On 2021-09-28 13:18 GMT
மயிலாடுதுறை அருகே மதுவிற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டை சேர்ந்தவர் செல்வம்(வயது38). இவர் சித்தர்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News