செய்திகள்
கைது

சீர்காழி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Published On 2021-09-25 15:55 IST   |   Update On 2021-09-25 15:55:00 IST
சீர்காழி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

சீர்காழி அடுத்த தொடுவாய் அன்னை தெரசா வீதி சுனாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவர் கடந்த 5-ம் தேதி மாரியம்மன் கோவில் அருகே காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் முருகன் தொடுவாய் பகுதியில் உள்ள மதியழகன் என்பவர் வீடு புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீடு புகுந்த முருகனை பிடித்து அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் சிலர் அடித்துள்ளனர். அதன் பின்னர் முருகன் இறந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்து தொடுவாய் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவியரசன் (24), வெள்ளரீசன் (44), மதுரைவீரன் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அஞ்சம்மாள், செல்வம், செல்வநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Similar News