செய்திகள்
தேசூரில் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா- 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளியில் படிக்கும் கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரணி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து, பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையடுத்து கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது. சுகாதராதுறையினர், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளியில் படிக்கும் கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரணி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து, பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையடுத்து கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது. சுகாதராதுறையினர், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.