செய்திகள்
கைது

காஞ்சீபுரம் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2021-09-17 17:30 IST   |   Update On 2021-09-17 17:30:00 IST
காஞ்சீபுரம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களுடன் ஒரு நபர் மதுரைக்கு செல்ல இருப்பதாக சிவகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலையில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 பண்டல்களில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அந்த நபரை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை, உசிலம்பட்டி தாலுகா சேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (வயது 49) என்பதும் கஞ்சா பொட்டலங்களை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையொட்டி ஒச்சப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News