செய்திகள்
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

Published On 2021-09-17 02:58 GMT   |   Update On 2021-09-17 02:58 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். எனினும் விடுதலையும், பரோலும் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காலையில் உணவு உண்ணவில்லை. பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அன்று இரவு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்றனர்.
Tags:    

Similar News