செய்திகள்
திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தற்கொலை
காஞ்சிபுரத்தில் திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மகாத்மா காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.
ஆறுமுகம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவும் அவர் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் ஆறுமுகத்தின் அறை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மகாத்மா காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.
ஆறுமுகம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவும் அவர் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் ஆறுமுகத்தின் அறை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.