செய்திகள்
3 ஆசிரியர்களுக்கு கொரோனா- கடலாடி அரசு பள்ளி மூடல்
ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த, கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 29-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.
இதில் அவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினர் பள்ளிக்கு சென்று அங்கு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.
இதில் 2 பெண் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் பணிபுரியும் 15 ஆசிரியர்கள் மற்றும் 150 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த, கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 29-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.
இதில் அவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினர் பள்ளிக்கு சென்று அங்கு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.
இதில் 2 பெண் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் பணிபுரியும் 15 ஆசிரியர்கள் மற்றும் 150 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.