செய்திகள்
விநாயகர் சிலை வாங்கும் பெண்கள்.

புதுவையில் விநாயகர் சிலை வைக்க தடையா?

Published On 2021-09-04 09:03 GMT   |   Update On 2021-09-04 09:03 GMT
தமிழகத்தை போல் புதுவையிலும் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைகளை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தை போல் புதுவையிலும் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்த நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுவையில் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் பயப்பட தேவையில்லை. எச்சரிக்கையுடன் இருந்தால் போதும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

புதுவையில் விநாயகர் சிலை வைக்க எந்த தடையும் இல்லை. மக்கள் கட்டுப்பாடுகளுடன் விழாவை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


Tags:    

Similar News