செய்திகள்
தூசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
தூசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே சின்ன ஏழாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி ஹேமலதா. இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு கோட்டீஸ்வரி (வயது 17), சுமித்ரா (14) என 2 மகள்கள்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஹேமலதா அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்த கோட்டீஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.