செய்திகள்
விபத்து

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம்

Published On 2021-08-29 11:31 GMT   |   Update On 2021-08-29 11:38 GMT
விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

விக்கிரவாண்டி அருகே வி.நெற்குணம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது57).

சம்பவத் தன்று இவர் புதுவையில் நடந்த தனது மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முற்றாம்பட்டை சேர்ந்த நண்பர் குப்புசாமி (57) என்பவருடன் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்தது இருவரும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நடராஜன் ஓட்டி சென்றார். பின்னால் குப்புசாமி அமர்ந்து வந்தார்.

குமாரப்பாளையம் சாலையில் சென்ற போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப நடராஜன் மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நடராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜனும், குப்புசாமியும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஒரு கார் மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் குப்புசாமி வீடு திரும்பினார். நடராஜன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நடராஜனின் மகன் முரளிராஜன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News