செய்திகள்
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர், பாடாலூர், குன்னம் போன்ற பகுதிகளில் வாகனசோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது போக்கு வரத்து விதிமுறைகளை மீறி சாலைவரி செலுத்தாமை, அதிகபாராம் ஏற்றி செல்லுதல் போன்றவை காரணமாக ஒரு ஜேசிபி மற்றும் 6 கனரக வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
சாலைவரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.4லட்சமும், அதிக பாரம் ஏற்றிசென்ற 4 கனரக வாகனங்களுக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வாகனங்களை தொடர்ந்து சாலையில் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.