செய்திகள்
தற்கொலை

நாகூரில் தூக்குப்போட்டு சமையல்காரர் தற்கொலை

Published On 2021-08-27 17:15 IST   |   Update On 2021-08-27 17:15:00 IST
நாகூரில் தூக்குப்போட்டு சமையல்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது இர்சாத் (வயது 27).இவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மனமுடைந்து நேற்று வீட்டின் அருகே உள்ள பாழடைந்து கிடக்கும் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் முகமது இர்சாத்தை மீட்டு சிகிச்சைக்காக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News