செய்திகள்
தற்கொலை

குன்னம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-08-24 15:30 IST   |   Update On 2021-08-24 15:30:00 IST
குன்னம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நன்னை கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ரவிச்சந்திரன்(வயது 21). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனை கண்ட உறவினர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News