செய்திகள்
முந்திரி சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம்- உதவி இயக்குனர் தகவல்
வறட்சியை தாங்கி வளரக்கூடிய முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும்.
சிவகங்கை:
தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகள் வருமானத்தை பெருக்கிட ஏதுவாக பல்வேறு திட்டங்கள் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தரிசு நிலத்தின் தங்கம் என்றழைக்கப்படும் முந்திரி சாகுபடிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் எக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 1 எக்டேருக்கு 204 எண்கள் முந்திரி ஒட்டு கன்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி அதிகபட்சமாக 4 எக்டேர் வரையிலும் மானியம் பெற முடியும். மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனமும் அமைத்து முந்திரி சாகுபடியை செம்மையாக செய்ய இயலும்.
வறட்சியை தாங்கி வளரக்கூடிய முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். முந்திரி மகசூல் பெற நடவு செய்த நாளிலிருந்து 3 வருடங்கள் ஆகும். இந்த 3 ஆண்டுகளில் ஊடுபயிராக காய்கறி, பயறு வகைகளை பயிரிட்டு கூடுதல் லாபம் பெற முடியும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலவுடமை ஆவணங்களுடன் ஆதார்அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் இவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார, தோட்டக்கலை உதவி இயக்கனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகள் வருமானத்தை பெருக்கிட ஏதுவாக பல்வேறு திட்டங்கள் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தரிசு நிலத்தின் தங்கம் என்றழைக்கப்படும் முந்திரி சாகுபடிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் எக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 1 எக்டேருக்கு 204 எண்கள் முந்திரி ஒட்டு கன்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி அதிகபட்சமாக 4 எக்டேர் வரையிலும் மானியம் பெற முடியும். மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனமும் அமைத்து முந்திரி சாகுபடியை செம்மையாக செய்ய இயலும்.
வறட்சியை தாங்கி வளரக்கூடிய முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். முந்திரி மகசூல் பெற நடவு செய்த நாளிலிருந்து 3 வருடங்கள் ஆகும். இந்த 3 ஆண்டுகளில் ஊடுபயிராக காய்கறி, பயறு வகைகளை பயிரிட்டு கூடுதல் லாபம் பெற முடியும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலவுடமை ஆவணங்களுடன் ஆதார்அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் இவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார, தோட்டக்கலை உதவி இயக்கனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.